பிட்டு தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
என் இனிய அன்பு
பிட்டுத்தோழிக்கு...
எட்டு நாளில் சிநேகம்
கலந்துறவாடிய
அறிமுகம் மட்டுமே
அங்கே நீ
இங்கே நான்
நமக்குள் ஏதும் பிணைப்பில்லை
இந்த படிப்பினைத்தவிர
பதினாறு மணி நேர
வகுப்புகளில்
பாடத்தை கவனித்ததைவிட
பாதி தூங்கிவழிந்தும்
மீதி நமக்குள் சிணுங்கிய
கலாய்த்தல்களும்!!
வகுப்புகள் மட்டுமே நம்மை
தோழிகளாக்கி விடவில்லை
எக்ஸாமில் பிட்டும்
பிணைத்துவிட்டது
நாமெழுதிய முதல் தேர்வில்
தயக்கங்களில்லாமலும்
மறைவுகளில்லாமலும்
உன் காகிதத்திரையில்
ஓடிய அத்தனை எழுத்துக்களும்
நம் தலையெழுத்தாய் மாறிய
பெருமை உன்னையே சாரும்
பழகிய காலங்களை விட
நம்மை நாம் நினைத்துக்கொண்ட
நாட்களே அதிகம்
கடந்தநாட்களில் உன்னை நான்
அறியவில்லை
அறிந்த நாள் முதல் உன்னைபிரிய
மனமில்லை தோழியே!
அடுத்து வரவிருக்கும்
தேர்வுகளில்
நீயே எங்கள் பிட்டு
தெய்வமாய் அருள்புரிவாய்!!
நீ காணும் அனைத்து
நாட்களும்
வெற்றிநாட்களாகவும்
எதிர்காலம் உன் வசப்படவும்
என் வாழ்த்துக்கள்
இன்று போல் என்றும் கடவுளின் கருணையால் மகிழ்ச்சியாக வாழ என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
7 comments:
கவிதை நன்றாக உள்ளது, இந்த சிட்டுக்குருவி கவிதை வானத்தில் மென்மேலும் சிறகடித்து பறக்க என் வாழ்த்துகள்
உங்க பிட்டு தெய்வத்துக்கு எனது மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
exam bitta vachi ippadi kooda kavidhai sollalaamo?
ஹா ஹா ஹா
ம்ம் எழுதலாம்
நன்றி ஜோசப் ஜி
நன்றி சுசி அக்கா
அருமையான கவிதை.
இனிமே தலைப்பிடும்போது கூடுதல் கவனமா இருங்க. தலைப்பை படிச்சிட்டு நான்கூட என்னமோ ஏதோனு பயந்துட்டேன்...
கவிதை நன்றாக உள்ளது
வாழ்த்துக்கள்
Post a Comment