பொத்தல் கவிதைகள்!
மாலை வேளையில்
உண்ட மயக்கம்
தெளிந்த சிந்தனையில்
சுவாசிக்க மறந்த
சன்னல் காற்றில்
மரத்தின் கூர்கிளையின்
நுனியிலை சிந்திய
மழைத்துளியில்
தெரிந்த அவளின்
ஒரு முகசாயல்!
சிலவேளைகளில்
சிந்திக்க மறந்த
முற்செடிகளில்
திரும்பவைக்கிறது
என்னையும் கால்வரை!!
சொல்ல மறந்த
கதைகளெல்லாம்
பேச ஆரம்பிக்கிறது
எனது டைரியில்!!
அவளின் கடைக்கண்
பார்வைக்கல்லுக்கு
தப்பிய மாங்காயெல்லாம்
இறந்துகொண்டிருக்கிறது
வெயிலில்!!
கனவுகளையெல்லாம்
சேகரித்து
பொத்திவைத்த
மூட்டைக்குள்
பொத்தல்!!